மனநோய்க்கு மருந்துக்கேட்ட கணவன்.! மனைவியை மயக்கி மந்திரவாதி செய்த லீலை.!
women rapped in noyda
மந்திரவாதி ஒருவர் மன நோய்க்கு சிகிச்சை அளித்ததாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தில் நொய்டாவில் கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக திருமணமான ஒரு தம்பதி குடியேறி இருக்கின்றனர். 20 வயதான அந்த புதுப்பெண் மனநோய் காரணமாக சற்று ஆக்ரோஷமாக வெறியுடன் நடந்து கொள்வாராம். இதனால் அந்த கணவர் பல இடங்களுக்கு அவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், சிகிச்சை பலன் அளிக்கவில்லை. இந்நிலையில், அவருடைய பக்கத்து ஊரைச் சேர்ந்த மந்திரவாதி அவர்களுடைய வீட்டிற்கு வந்து அந்த பெண்ணை தன்னிடம் சிகிச்சைக்கு அழைத்து வருமாறு கூறிவிட்டு, அதற்காக ரூபாய் 5000 பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
மந்திரவாதியின் வீட்டிற்கு தன்னுடைய மனைவியை அழைத்துச் சென்ற கணவரை வெளியே காத்திருக்க கூறிவிட்டு அவருடைய மனைவிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி உள்ளே அழைத்துச் சென்று மயக்கமுற செய்யும் மூலிகை ஒன்றை கொடுத்து, இந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார்.
மயக்கம் தெளிந்த நிலையில் அந்த பெண் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்த்து தன்னுடைய கணவரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கணவர் மந்திரவாதியிடம் கேட்டதற்கு இருவரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.