விடாமல் பாலியல் தொல்லை.. விரக்தியடைந்த பெண்.. ஆத்திரத்தில் செய்த தரமான சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் குணா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பிரிஜ்பூஷன் சர்மா என்ற 16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்துள்ளார். 

இந்த சம்பவம் கடந்த 2005ஆம் ஆண்டு நடந்தது. அதன் பின்னர் 15 ஆண்டுகளாக அந்த வீடியோவை காட்டி அந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. அதன் பின்னர்,இரண்டு குழந்தைகளும் அவருக்கு பிறந்துள்ளது. இருப்பினும், அந்த நபர் அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்த பெண் சமீபத்தில் குடும்பத்துடன் வேறு ஊருக்கு சென்றுவிட்டார். 

விடாமல் அங்கும் விரட்டிச் சென்று செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். விரகத்தியடைந்த அந்த பெண் இனி பொறுக்க முடியாது என நினைத்து வீட்டுக்கு வந்த அந்த நபரை ஹாலில் அமர வைத்து விட்டு, கிட்சனுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து அந்த நபரை வெறி தீர 25 முறைக்கு மேல் குத்தி கொலை செய்துள்ளார். தற்போது அந்த பெண்ணை போலீஸார் கைது செய்ததுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women murder who torched her sexual abuse video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->