கள்ளக்காதல் செய்த கணவன்.. செருப்பு விளக்குமாறு பிய்ய அடித்து, இழுத்து சென்ற மனைவி.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் பெட்டப்பள்ளி மாவட்டத்தில் சம்பத் என்பவர் கரீம் நகரில் இருக்கும் துணி கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவருக்கும், கடந்த 2016 இல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. 

தனது மனைவியை அவர் அடித்து துன்புறுத்தி வந்ததால் கொடுமை தாங்க முடியாத மனைவி தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.  அதன் பின்னர் சம்பத் தன்னுடன் வேலை பார்த்து வந்த வேறு ஒரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு, வாடகை வீட்டில் குடியேறி குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

இதுகுறித்து தகவலறிந்த பாக்கியலட்சுமி தனது குடும்பத்துடன் நேரடியாக கணவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஆவேசத்துடன் சென்று செருப்பு, விளக்குமாறு உள்ளிட்டவற்றால் கடுமையாகத் தாக்கி பின்னர் கயிற்றில் கட்டி காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்று ஒப்படைத்தார். 

அப்பொழுது அவர்கள் நடத்திய விசாரணையில், ஏற்கனவே அவர் மூன்று பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. ஏமாந்த நான்கு பெண்களும் தனித்தனியே அளித்த புகாரின் அடிப்படையில் சம்பத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women attack husband in telungana


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->