பல ஆண்களை திருமணம் செய்து 1.25 கோடி சுருட்டிய கில்லாடி பெண் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிக்கி (எ) சீமா, கடந்த 2013-ம் ஆண்டு ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் கழித்து கணவரின் குடும்பத்தினர் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்து, சமரசமாக ரூ.75 லட்சத்தை பெற்றார்.

பின்னர் சீமா கடந்த 2017 ஆம் ஆண்டில், குருகிராமில் உள்ள ஒரு மென்பொருள் பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று ரூ.10 லட்சத்தை செட்டில்மென்டாக பெற்று கொண்டார்.

இதைத் தொடர்ந்து அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டு கணவரின் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்துடன் அவர் தப்பித்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக கணவரின் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் படி போலீசார் சீமாவை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. 

அதாவது, திருமண மேட்ரிமோனி இணையதளங்களில் விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்த ஆண்களை குறிவைத்து சீமா வலைவீசியுள்ளார் என்றும் வெவ்வேறு மாநிலங்களில் பலரை திருமணம் செய்து, பல்வேறு வழக்குகளில் மொத்தம் ரூ.1.25 கோடி வசூலித்துள்ளார்" என்றும் தெரிய வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women arrested for money fraud


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->