பெண் மருத்துவர் கொலை-தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - Seithipunal
Seithipunal


கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, மேற்கு வங்காள அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இளம் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த  சில நாட்களுக்கு முன்பு அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அங்கு பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த அவர், 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு பயின்று வந்தார்.

கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தபோது அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்த நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள நபரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவத்தில் மருத்துவக்கல்லூரியை சேர்ந்தவர்களும் இருக்கக்கூடும் என சக மருத்துவர்கள் மற்றும் கொல்லப்பட்ட மருத்துவரின்  குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரியும், மருத்துவராகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பெண் மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மேற்கு வங்காள அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இந்த விவகாரம் தொடர்பாக 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மேற்கு வங்காள அரசின் தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman Doctor Killed National Human Rights Commission Notice


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->