அதிகரிக்கும் கெரோனா பாதிப்பு.. இனி முகக்கவசம் கட்டாயம்.. மாநில அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து பொது இடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள், கல்வி நிலையங்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wear mask compulsory in Karnataka


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->