மூன்று தலையுடன் பிறந்த அதிசய குழந்தை.. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள்.!!
Uttar Pradesh three head baby
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு அதிசய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிறந்த குழந்தை மூன்று தலையுடன் பிறந்துள்ளதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம், எட்டாவா மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி அரசு மருத்துவமனை கர்ப்பிணிப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை மூன்று தலையுடன் பிறந்துள்ளது. இந்த குழந்தை மூன்று தலையுடன் இருப்பதை கண்ட மருத்துவர்களும் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரதான தலைப்பகுதியில் ஒட்டிய இரண்டு தலைகள் இருப்பது போன்று பிறந்துள்ளது. மற்ற இரு தலைகளில் கண், மூக்கு, காது போன்ற உறுப்புகள் இல்லை. குழந்தை 50% உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்து இரண்டு தலைகளை நீக்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். அறுவை சிகிச்சை பிறகு மூளை வளர்ச்சி சீராக இருக்குமா என்று மருத்துவர்கள் சந்தேகமாக கூறுகின்றனர்.
English Summary
Uttar Pradesh three head baby