உ.பி. || கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை..! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததனால், பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, வீடுகள் மற்றும் கடைகளுக்கு உள்ளும் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரியில் நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளுக்கு உள்ளேயும் நீர் புகுந்துள்ளது. 

இந்த மழை நீரால், வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில் நேற்று பெய்த தொடர் கனமழையால், நொய்டாவின் பல பகுதிகளில் நீர் தேங்கி காணப்படுகிறது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

இன்று மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என்றும் இன்று முதல் அடுத்த மூன்று  நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. 

இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நகரங்களில் உள்ள குழந்தைகள் முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுகிறது என்று அரசு அறிவித்து உள்ளது.

இதன்படி, லக்னோ, நொய்டா, காசியாபாத், கான்பூர் மற்றும் ஆக்ரா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு நகரங்களை சேர்ந்த பள்ளிகளும் இன்று மூடப்பட்டு இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

utra pradesh school leave due to heavy rain


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->