UPI தினசரி பணப்பரிவர்த்தனை வரம்பு உயர்வு.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் யு.பி.ஐ. மூலம் பணப்பரிமாற்றம் அதிகளவில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த யு.பி.ஐ பணபரிமாற்றத்தில் சில புதிய முறைகள் மாற்றப்பட்டு அமலுக்கு வருகின்றது. அந்த வகையில், ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கும், பங்குச்சந்தை முதலீடு, கடனை திரும்ப செலுத்துதல் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்காகவும் ஒரு நாளைக்கு பணபரிவர்த்தனை செய்யும் தொகையை உயர்த்தி இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது, பங்குச்சந்தை முதலீடு, காப்பீட்டு பிரிமீயம், கடன் மற்றும் கடன் தவணை, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்ட நிறுவனங்களுக்கான பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் யு.பி.ஐ. மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அனுப்பலாம் என்று இருந்ததை தற்போது ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் படி, கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகையை பொறுத்தமட்டில் ரூ.1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை வரம்பு ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.

இதேபோல், தனிநபர் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொருவரின் கணக்கிற்கு அனுப்பும் பண பரிவர்த்தனையை பொறுத்த வகையில், ஏற்கனவே அமலில் இருப்பது போன்று ரூ.1 லட்சமாகவும், கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம், ஐ.பி.ஓ. போன்றவற்றுக்கான பரிவர்த்தனையும் ஏற்கனவே இருப்பது போன்று ரூ.5 லட்சமாக தொடர்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

upi daily payment increaments increase


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->