ஓடும் ரயிலில் சிறுமியிடம் அத்துமீறிய நபர்! அடித்தே கொலை செய்த குடும்பம்! - Seithipunal
Seithipunal


ரயில் பயணத்தின் போது 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டிய ரயில்வே ஒப்பந்த ஊழியரை, சிறுமியின் குடும்பத்தார் அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திர பிரதேச மாநிலம், லக்னோ - கான்பூர் இடையே செல்லக்கூடிய விரைவு ரயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. 

(குறிப்பு: பாலியல் வன்கொடுமை சம்பந்தமான வழக்குகளில் பெண்களின் பெயர் மற்றும் அவரின் குடும்பத்தாரின் பெயர் மறைக்கப்படுகிறது) 

சம்பவம் நடந்த அன்று குடும்பத்துடன் சிறுமி பயணம் செய்து கொண்டிருந்தபோது, சிறுமி தனியாக இருந்ததை நோட்டமிட்ட ரயில்வே ஒப்பந்த ஊழியர் பிரசாந்த் குமார் (34 வயது) என்பவர், சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடுமையை தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் குடும்பத்தார் மற்றும் சக பயணிகள், பிரசாந்த் குமாரை கடுமையாக தாக்கி உள்ளனர். 

சுமார் 1.30 மணி நேரம் தாக்கிய பின்னர், ரயில்வே போலீசாரிடம் பிரசாந்த் குமாரை ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து ரயில்வே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில். அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நேற்று பீகார் மாநிலத்தில் பெண் செவிலியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருத்துவர் உள்ளிட்ட மூன்று பேரில், மருத்துவரின் ஆணுறுப்பை துண்டித்த பெண் செவிலியர், போலீசாருக்கு தகவல் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. 

இந்த சம்பவத்தில் மருத்துவரை உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்த போலீசார், துரிதமாக செயல்பட்ட பெண் செவிலியருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் சம்பந்தப்பட்ட அந்த பெண் செவிலியர் தலைமருவானதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UP running Train Child Abuse case


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->