எமனாக வந்த தென்னை மரம் - 2 பெண்கள் பலி.!!
two womens died for coconut tree fell down in kerala
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் குனத்துக்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் வசந்தா, சந்திரிகா. இவர்கள் இருவரும் 100 நாள் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், இருவரும் சக பணியாளர்களுடன் இன்று வழக்கம்போல் குனத்துக்கல் கிராமத்தில் வேலை செய்துவிட்டு மதிய உணவு முடித்தப்பின் வேலை நடைபெறும் பகுதிக்கு அருகே உள்ள தென்னை தோட்டத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக தென்னை மரம் முறிந்து உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் வசந்தா, சந்திரிகா உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் ஓடி வந்து நன்கு பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வசந்தா, சந்திரிகா இரண்டு பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
two womens died for coconut tree fell down in kerala