காஷ்மீர் || ஷோபியான் துப்பாக்கி சூட்டில் இரு ராணுவ வீரர்கள் வீர மரணம்…!
Two soldiers martyred in Shopian shooting
பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் உள்ள செர்மார்க் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் , இந்த துப்பாக்கி சூட்டில் சந்தோஷ் யாதவ், சவான் ரோமித் தனாஜி என்ற இரு பாதுக்காப்பு படை வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவன் உயிரிழந்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் தொடர்ந்தூ ஈடுப்பட்டு வருகின்றனர்.
English Summary
Two soldiers martyred in Shopian shooting