சொகுசு காரில் கடத்தப்பட்ட புதுச்சேரி மதுபாட்டில்கள் - கையும் களவுமாக பிடித்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலங்காடு கிராமத்தில் தனிப்படை உதவி ஆய்வாளர் மணிகண்ட கணேஷ் தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், போலீசாரை கண்டதும் கார் நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. இதனால் போலீசார், காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் காரை சோதனை செய்ததில் காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தி வரப்பட்ட 2200 மது பாட்டில்கள் அதில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மது பாட்டில்களுடன் சொகுசு காரை பறிமுதல் செய்து, காரைக்கால் வரிச்குடியை சேர்ந்த திலீப் குமார், ரமேஷ் உள்ளிட்ட இருவரையும் கைது செய்து சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested for liquor kidnape in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->