#ஜார்க்கண்ட் || மின்னல் தாக்கி பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு.! இழப்பீடு அறிவிப்பு.!
Two people were killed by lightning jharkhand
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கி பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில், வயலில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது, திடீரென மின்னல் தாக்கியதில் பல்ராம் யாதவ்(56) மற்றும் மன்மதி தேவி(45) ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேதினிராய் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று துணை ஆணையர் ஆஞ்சநேயுலு டோடே தெரிவித்துள்ளார்.
English Summary
Two people were killed by lightning jharkhand