தேஜஸ்விக்கு நெருக்கடி: செல்வாக்கு மிக்க இரண்டு எம்எல்ஏ.க்கள் திடீர் ராஜினாமா: ஆட்டம் காணும் ஆர்ஜேடி கட்சி..!
Two MLAs resign from RJD
பீஹார் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ.க்கள் இருவர் ராஜினாமா செய்துள்ளனர். இது அக்கட்சிக்குள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பீஹாரில் வரும் நவம்பர் 06 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் பீஹாரில் ஆளும் தேஜ கூட்டணியும், எதிர்கட்சியான மகாபந்தன் கூட்டணியும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுப்பட்டுள்ளன. இந்த பரபரப்பான சூழலில், லாலுகட்சியின் ஆர்ஜேடியின் எம்எல்ஏக்களான நவடா தொகுதியின் விபா தேவி, ரஜவ்லி தொகுதியின் பிரகாஷ் வீர் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

அத்துடன் ராஜினாமா கடிதத்தை சட்டமன்ற சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவிடம் ஒப்படைத்துள்ளனர். ஆர்ஜேடியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் டில்லி சென்றுள்ள நிலையில், குறித்த இரண்டு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளமை அக்கட்சிக்குள் புதிய நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கட்சிக்குள் ஒற்றுமை ஏற்படுத்துவதில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதிலும் ஆர்ஜேடி கட்சி ஏற்கனவே சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்த பிரச்சனைகளை மத்தியில், மக்கள் செல்வாக்கு மிக்க இரண்டு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது பீஹார் தேர்தலில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.