உத்தரபிரதேசத்தில் சோகம்...ரூ.5 லட்சம் கடனால் ஒரே குடும்பத்தைதை சேந்த 3 பேர் த**கொலை! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் கடன் வசூலிப்பு ஏஜெண்ட் நிறுவனம் தொல்லை அளித்ததால், ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்பூர் மாவட்டத்தை சேர்ந்த  சஞ்சீவ் ரானா-பிரேமாவதி என்ற தம்பதிக்கு பயல் என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். இதற்கிடையே,  சஞ்சீவ் குழந்தைகளின்  படிப்பு செலவிற்காக தனியார் வங்கியில் இருந்து ரூ. 5 லட்சம் கடன் வாங்கிய நிலையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் அவ்வப்போது காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், தனியார் வங்கி  கடன் வசூலிப்பு ஏஜெண்டுகள் சஞ்சீவ் வீட்டிற்கு அவ்வப்போது தொல்லை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடனை திருப்பி செலுத்த காலதாமதம் ஆனதால் தனியார் வங்கியை சேர்ந்த கடன் வசூலிப்பு ஏஜெண்டுகள் சிலர் நேற்று சஞ்சீவ் வீட்டிற்கு வந்து மீண்டும் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சளுக்கு ஆளான அடைந்த சஞ்சீவ் நேற்று இரவு மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து விஷம் குடித்துள்ளார். மகன்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தற்கொலை செய்துகொண்டவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy in Uttar Pradesh 3 people committed suicide after destroying the same family due to a loan of Rs 5 lakh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->