5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்றுடன் நிறைவு.. நாளை பெட்ரோல் விலை உயர வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 5 மாநில தேர்தல் இன்றுடன் முடிவடைவதையடுத்து நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஐந்து மாநில தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், உத்திரப் பிரதேசத்தில் இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளதை அடுத்து நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு குறைந்தது 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomorrow Petrol and diesel price possible to increase


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->