கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

கடந்த சில நாட்களாக சில மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதால் அம்மாநிலங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து இன்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today pm modi video conference with all state chief minister


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->