மும்பை அருகே சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம் - 3 பேர் பலி; 9 பேர் படுகாயம்.!!
three peoples died and nine peoples injured for building collapse near mumbai
மும்பை அருகே நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டம் விராரில் வசாய் தாலுகாவில் உள்ள நாரங்கி சாலையில் சாமுண்டா நகருக்கும் விஜய் நகருக்கும் இடையில் அமைந்துள்ள ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பின் நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி நள்ளிரவில் இடிந்து விழுந்துள்ளது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் படி மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் 9 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples died and nine peoples injured for building collapse near mumbai