ரத்தத்தை மாற்றி ஏற்றியதால் கர்ப்பிணி பலியான சோகம்!
The sorrow of a pregnant woman who died after a blood transfusion
ரத்தத்தை மாற்றி ஏற்றியதால் கர்ப்பிணி மற்றும் சிசு பலியான சம்பவம் டோங் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்தவர் 23 வயதான கர்ப்பிணி சைனா.இவர், குறைந்த அளவு ரத்தப்புரதம், காசநோய் போன்ற நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஜெய்ப்பூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்தநிலையில் கர்ப்பிணி சைனாவுக்கு ரத்தப்பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டபோது அவரது ரத்த வகை 'ஏ பாசிட்டிவ்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அப்போது டாக்டரின் பரிந்துரைப்படி, ரத்த வங்கியில் இருந்து 'ஏ பாசிட்டிவ்' வகை ரத்தம் பெறப்பட்டு, சைனாவுக்கு ஏற்றப்பட்டபோது கடுமையான காய்ச்சல், குளிர், ரத்தக்கசிவு அறிகுறிகள் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு,டாக்டர்கள் நடத்திய மறு பரிசோதனையில், சைனாவின் ரத்தவகை 'பி பாசிட்டிவ்' என்பதும், ரத்தவகை மாற்றி ஏற்றப்பட்டதால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.இதையடுத்து உடல்நிலை மிகவும் மோசம் அடைந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி சைனா பரிதாபமாக உயிரிழந்தார்.
English Summary
The sorrow of a pregnant woman who died after a blood transfusion