படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு; இன்று டெல்லி விஜய் சதுக்கத்தில்..! - Seithipunal
Seithipunal


76 வது குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் பாசறை திரும்பும் மெல்லிசை நிகழ்வு இன்று டெல்லி விஜய் சதுக்கத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; 

"ரைசினா மலைகள் மீது சூரியன் மறையும் கம்பீரமான பின்னணியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விஜய் சதுக்கத்தில் 2025 ஜனவரி 29 அன்று 76 வது குடியரசு தின கொண்டாட்டங்களின் நிறைவைக் குறிக்கும் படைகள் பாசறை திரும்பும் மெல்லிசை நிகழ்வு நடைபெற உள்ளது. 

ஜனாதிபதி திரவுபதி முர்மு,துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய மந்திரிகள், மூத்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சிறப்பு பார்வையாளர்கள் முன்னிலையில் இந்திய ராணுவம், இந்தியக் கடற்படை, இந்திய விமானப்படை, மத்திய ஆயுதக் காவல் படைகள் ஆகியவற்றின் இசைக்குழுக்கள் ரசிக்கத்தக்க 30 இந்திய பாடல்களை இசைக்கவுள்ளன. 

மெல்லிசை நிகழ்வில் 'கதம் கதம் பதாயே ஜா' என்ற பாடலிசையுடன் தொடங்கி 'சாரே ஜஹான் சே அச்சா' என்ற பிரபலமான பாடலுடன் இந்த நிகழ்வு நிறைவடையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The parade will be held at Vijay Square in Delhi today In the square


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->