குஜராத்தை புரட்டி எடுத்த கனமழை.. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் வாகனங்கள்!
The heavy rain that wreaked havoc in Gujarat Vehicles being swept away in the flood
குஜராத்தில் பெய்துவரும் கனமழையால் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது . பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் முறித்து விழுந்து மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் தென் மேற்கு பருவமழை தொடங்கினாலும், தற்போது பருவமழை குஜராத் உள்ளிட்ட சில பகுதிகளில் தீவிரம் அடைந்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு குஜராத்தின் அஹமதாபாத் சூரத் காந்திநகர் பாவ்நகர் உள்ளிட்ட பல இடங்களிலும் இரவு முழுவதும் கனமழை பெய்தது.அப்போது இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு பல இடங்களில் வெள்ளம் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பாவ் நகரில் உள்ள சிஹோர் தாலுகா பகுதியில் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகளில் தேங்கி இருக்கும் வெள்ள நீரால் பேருந்து, பைக் உள்ளிட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
English Summary
The heavy rain that wreaked havoc in Gujarat Vehicles being swept away in the flood