#சத்தீஸ்கர் || 80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன்.! மீட்கும் பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் 80 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 11 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி ஷம்பா மாவட்டத்தில் உள்ள பிஹ்ரிட் கிராமத்தை சேர்ந்த 11 வயதான சிறுவன் ராகுல் ஷாகு, நேற்று மதியம் 2 மணி அளவில் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்பொழுது வீட்டிற்கு பின்புறம் இருந்த பயன்பாடற்ற 80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக சிறுவன் தவறி விழுந்துள்ளான்.

இதையடுத்து ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் சென்று பார்த்த போது ராகுல் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசாருக்கும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The boy who slipped into the deep well in Chattisgarh


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->