தெலுங்கானா : கல்லூரி மாணவரைத் தாக்கிய பாஜக எம்பியின் மகன்.! வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாரதீய ராஷ்டீரிய சமிதி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவராகவும், எம்பியாகவும் பண்டி சஞ்சய் என்பவர் இருந்து வருகிறார். 

இவருடைய மகன் பண்டி சாய் பாகீரத். மேலாண் படிப்பு படித்து வரும் இவர், மகிந்திரா பல்கலை கழகத்தின் வளாகத்தில் மற்றும் விடுதி அறையில் என்று இரண்டு இடங்களில் கல்லூரி மாணவர் ஒருவரை மிரட்டி, அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக, பாகீரத் மற்றும் மற்றொரு நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக துண்டிகல் காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, 

"பாஜக எம்.பி.யின் மகன் பண்டி சாய் பாகீரத், கல்லூரி மாணவர் ஒருவரை அடித்து, துன்புறுத்தியதற்காக அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்தினரின் சார்பில் அளித்த புகாரின் படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றுத் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அந்த வீடியோ தொடர்பாக விசாரணை செய்ததில்,  ஸ்ரீராம் என்ற அந்த மாணவர், பாகீரத்தின் நண்பரின் சகோதரியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த பாகீரத் அந்த மாணவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கன்னத்தில் அறைந்துள்ளார். 

இது குறித்து வீடியோவை ஆளும் பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சியினர் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர், பாகீரத்துக்கும், தனக்கும் எந்த மோதலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

அந்த மாணவர் சம்பவம் குறித்து புகார் எதுவும் அளிக்கவில்லை. இருப்பினும், சம்பவம் தொடர்பாக பல்கலை கழகத்தின் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telungana bjp mp son attack college student vedio viral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->