தலைக்கேறிய மதுபோதையில் திருமணம் செய்துகொண்ட வாலிபர்கள்., காவல்நிலையத்தில் பஞ்சாயத்து.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ஜோகி பேட் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் (வயது 22) அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு அடிக்கடி மது அருந்த வருவார். இதே மதுக்கடைக்கு வாலிபர் (வயது 21) ஒருவரும் அடிக்கடி மது அருந்த வருவார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 1ஆம் தேதி இருவருக்கும் போதை தலைக்கேறிய நிலையில் திடீரென்று இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.

ஜோகி நாத் கோவிலுக்கு இருவரும் சென்று திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தங்களின் வீடுகளுக்கு சென்றார்கள். திடீரென்று ஆட்டோ டிரைவரின் வீட்டுக்கு அந்த வாலிபர் வந்து அவரது பெற்றோரை சந்தித்து தாங்கள் திருமணம் செய்து கொண்டதை தெரிவித்தார்.

அவர்கள் அந்த வாலிபரை துரத்தினர். இதனால் வாலிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்புகாரில் ஆட்டோ டிரைவர் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டுமென்று தெரிவித்திருந்தார்.

ஆட்டோ டிரைவர் 10000 ரூபாய் கொடுப்பதாக கூறினார். இதற்கு சம்மதம் தெரிவித்த வாலிபர் பெற்றுக்கொண்டு வீடு திரும்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telungan young man marry young man


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->