ஓட்டலில் கள்ளகாதலியுடன் உல்லாசம்.. உறவினர்கள், காவலர்கள் புடைசூழ மனைவி நடத்திய மாஸ் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கனா மாநிலத்தில் உள்ள பத்ராதரி கொத்தக்கூட்டம் நகரில் ஆயுதப்படை காவல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சுபாஷ். இவர் கடந்த 2017 ஆம் வருடத்தில் உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சுபாஷிற்கு மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்த சூழ்நிலையில், கணவரின் கள்ளக்காதல் விவகாரம் பெண்மணிக்கு தெரியவரவே, அதிர்ச்சிகரமான சம்பவத்தன்று கள்ளகாதலியுடன் விடுதிக்கு செல்லும் தகவலும் கிடைத்துள்ளது. இதனையயடுத்து காவல் அதிகாரிகள் மற்றும் உறவினர்களை கையோடு விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். 

அங்கு இருந்த கள்ளக்காதல் ஜோடியை செருப்பு மற்றும் கட்டை, வீடு பேருக்கும் துடைப்பம் என கைகளில் கிடைத்த பொருட்களை எடுத்து அடித்து நொறுக்கியுள்ளார். நடுரோட்டில் கள்ளக்காதல் ஜோடியை விரட்டி விரட்டி அடித்த நிலையில், காவல் துறையினர் இருதரப்பையும் விலக்கிவிட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். 

பின்னர் மனைவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், துறை நீதியிலான நடவடிக்கையும் எடுக்க இருப்பதாக காவல் துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Telangana illegal affair police officer attacked by wife in road


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->