மேல்மருவத்தூர் : ரெயிலில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் திண்டிவனம் அருகே உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதற்காக இவர் சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் பயணிகள் ரெயிலில் செல்வது வழக்கம். 

இந்த நிலையில், அவர் நேற்று வழக்கம் போல் வீட்டில் இருந்து எடுத்து செல்லும் உணவை சாப்பிட்டு விட்டு பாத்திரத்தை மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி கழுவி விட்டு ரெயிலில் ஏறுவதற்காக வந்துள்ளார். 

அப்போது திடீரென ரெயில் புறப்பட்டு விட்டது. இதனால், அவர் ரெயிலில் ஓடி வந்து ஏறும் போது கால் தவறி நடை மேடைக்கும் ரெயிலுக்கும் இடையில் கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher died in melmaruvathur railway station for fell down in railway track


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->