எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் - போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப் பட்டுள்ளார்
 

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் அதே பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவியை கடந்த ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

மேலும் சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் தேர்வு மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இருப்பினும் ஆசிரியரின் இந்த கொடூர செயலை தாங்க முடியாத சிறுமி தனது தோழியிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறி கதறி அழுதுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தோழி சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் சம்பவம் தொடர்பாக கவுனிப்பள்ளி போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பள்ளியில் உள்ள மற்ற சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமை செய்தாரா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher arrested in karnataga for sexull harassment to student


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->