தற்கொலைதானா...? கொலையா...? மர்மம் சூழ்ந்த மரணம்! விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவி...!
Suicide Murder Mysterious death Student hangs herself hostel
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம், டவுனில் உள்ள ஒரு தனியார் பி.யூ. கல்லூரியில் கல்வி பயின்று வந்தவர் 17 வயது 'சீமா ரத்தோட்' . அக்கல்லூரிக்கு அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்து வந்த அவர், நேற்று காலையில் திடீரென தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

அந்த காட்சியைப் பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக விடுதி கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த அவர், சீமாவை மீட்டு பல்லாரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், சீமா தற்கொலை செய்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.மேலும், மரணம் மர்மமாக உள்ளதால், சீமாவின் பெற்றோர் நவநகர் காவலில் புகார் அளித்தனர்.
இதையடுத்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, சீமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மரணத்திற்கு பின்னாலுள்ள காரணங்களை தெளிவுபடுத்தும் வகையில் காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Suicide Murder Mysterious death Student hangs herself hostel