மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்.! ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை கொலை செய்த மகன்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை திட்டம் போட்டு மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தில் உள்ள சேந்த்வா நகர் பகுதியில் வசித்து வந்த சகன் பவார்(52) என்பவர் திடீரென கடந்த 10-ந்தேதி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சேந்த்வா போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் இதுகுறித்து சி.சி.டி.வி. காட்சி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இது திட்டமிட்ட கொலை என்ற சந்தேகம் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்புடைய நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பவாரை அவரது மகன் அனில் பவார்(27) தனது நண்பர்களான பின்டு, கோலு மற்றும் கரண் ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் அனில் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், குடும்ப விவகாரம் மற்றும் பணத்திற்காக தந்தை மற்றும் மகன் இடையே மோதல் இருந்ததும், ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக தந்தையை மகன் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son who planned to kill father for 10 lakh insurance money in madhya pradesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->