திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை - 6 பேர் பலி.!!
six peoples died for roof collapse in maharastra
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையை அடுத்த கல்யாண் மங்கலராகோ பகுதியில் சப்தசுருங்கி என்ற நான்கு மாடி கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது.
இதனால், மழைக்காலம் தொடங்கும் முன்பு கட்டிடத்தைக் காலி செய்யுமாறு குடியிருப்புவாசிகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டில் கட்டுமான பணிகள் நடந்து வந்துள்ளது.
அப்போது 2-வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் காங்கிரீட் கூரை நேற்று மதியம் திடீரென இடிந்து கீழ்ப்பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் கீழ் வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
அதன் படி விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் உயிருக்குப் போராடியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
six peoples died for roof collapse in maharastra