காஷ்மீரில் உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!...பயங்கரவாதிகள் கடத்தலில் ராணுவ வீரர் உயிரிழந்த நிலையில் மீட்பு! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணி 49 தொகுதிகளை கைப்பற்றி ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை பிடித்துள்ளது.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் ரோந்து சென்றுள்ளனர். அப்போது, 2  பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இருந்த போதிலும் அவர்களில் ஒருவர் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பி வந்துள்ளார்.

உடலில் இரண்டு குண்டு காயங்களுடன் தப்பி வந்த இவர், மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரின் உடல்நிலை சிகிச்சைக்கு பின்பு சீராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, அந்த பகுதியை தங்களுடைய கட்டப் பாட்டிற்குள் கொண்டு வந்தபாதுகாப்பு படையினர்  காணாமல் போன வீரரை மீட்கும் பணியில் தீவிரமாக பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.  இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தின் பத்ரிபால் வன பகுதியில் குண்டு காயங்களுடன் உயிரிழந்துள்ள அந்த வீரரின் உடலை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking incident in jammu and kashmir soldier killed in terrorist abduction and rescue


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->