ஷாக்! காதலி எரிந்த தீயில் குதித்த காதலன்...! அடுத்து நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா நாக்பூரிலுள்ள கமலி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், இளம்பெண் ஒருவரை உருக்கமாக காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில், தனது காதலனுடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்தால் அந்த இளம்பெண் செய்வதறியாது தன்னை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இச்செய்தி அறிந்து மனமுடைந்த காதலன், மது அருந்திவிட்டு இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திற்குச் சென்றுள்ளான். அவன் அங்கு தனது காதலியின் உடல் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் குதித்துவிட்டான்.

இதைக்கண்ட பெண் வீட்டார், அவனை நெருப்பிலிருந்து மீட்டு கடுமையாக தாக்கியதால் வாலிபர் சுயநினைவு இழந்துள்ளார்.பிறகு அங்கிருந்தவர்கள் படுகாயத்துடன் வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சிகிச்சையில் உள்ள வாலிபர் அளிக்கும் வாக்குமூலத்தை கொண்டு மேற்கொண்டு விசாரணை நடத்த காவலர்கள் முடிவு செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock boyfriend jumped into fire where his girlfriend was burning What happened next


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->