சர்வதேச அளவில் மிகப்பெரிய பாஸ்போர்ட், விசா முறைகேட்டில் ஈடுபட்ட ஷாஹிர் யூசுப் கைது.!
Shahir Yusuf arrested international passport and visa scam
இந்திரா காந்தி விமான நிலைய காவல்துறையினர், சர்வதேச அளவில் மிகப்பெரிய பாஸ்போர்ட் மற்றும் விசா முறைகேட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
இது குறித்து விமான நிலைய காவல்துறை தலைமை இயக்குனர் தனு ஷர்மா தெரிவித்துள்ளதாவது,
"கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 325 போலி பாஸ்போர்ட், 175 போலி விசாக்கள் மற்றும் இதர ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம். குஜராத்திலிருந்து குவைத்துக்குச் சென்ற இந்தியர் ஒருவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து காவல்துறைக்கக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய குற்றவாளி ஸாகிர் யூசுப் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கும்பல் பிடிபட்டுள்ளது". என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Shahir Yusuf arrested international passport and visa scam