காலையிலேயே சோகம் - ஒடிசாவில் படகு கவிழ்ந்து ஒருவர் பலி ; 7 பேர் மாயம்.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜர்சுகுடா மாவட்டம் மகாநதி ஆற்றில் சுமார் ஐம்பதுக்கும் அதிகமானோரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று சென்றது. இந்தப் படகு எதிர்பாராத விதமாக திடீரென ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 3 குழந்தைகள் உள்பட 7 பேர் மாயமாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

இதுவரை சுமார் 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயா கோயல், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். 

மேலும், இந்த மீட்பு பணிகளில் உதவுவதற்காக புவனேஸ்வரில் இருந்து ஸ்கூபா நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

seven peoples missing and one man died in odisa


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->