உ.பியில் சோகம் - கட்டுப்பாட்டை இழந்து லாரியில் மோதிய சொகுசு பேருந்து - 7 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


உ.பியில் சோகம் - கட்டுப்பாட்டை இழந்து லாரியில் மோதிய சொகுசு பேருந்து - 7 பேர் பலி.!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்து அம்ப்த்கர்நகர் நோக்கி சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த பெருமத்தில் 45-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

இதையடுத்து இந்த பேருந்து லக்னோ - கோரக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.  இந்த கொடூர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், நாற்பது பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு, அவர்கள் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தும், லாரியும் மோதியதில் ஏழு பயணிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven peoples died and forty peoples injury in uttar pradesh for bus accident


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->