அனைத்து பள்ளிகளுக்கும் 20 ஆம் தேதி வரை விடுமுறை - எங்குத் தெரியுமா?   - Seithipunal
Seithipunal


நாட்டின் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி எடுத்து வருகிறது. 

இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பிகார் மாநிலத்தின் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அளவிற்கும் குறைவாக பதிவாகியுள்ளது. 

அதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடும் குளிர் காரணமாக பீகார் மாநிலத்தின் தலைநகரான  பாட்னாவில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 20-ந்தேதி வரை விடுமுறை விடப்படுவதாக பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

schools holiday to coming 20th for fog


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->