பள்ளி விடுதியில் மது விருந்துடன் பார்ட்டி நடத்திய பள்ளி மாணவர்கள்.!
School students drinks party in Andhra Pradesh
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மண்சேரியல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கோடை விடுமுறைக்கு முன்னதாக பிரியாவிடை நடத்த வேண்டுமென விடுதி வார்டனிடம் அனுமதி கோரியுள்ளனர்.
இந்த நிலையில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் வெளியிலிருந்து வரக்கூடிய மாணவர்களிடம் பணம் கொடுத்து மது வாங்கி பிரியாவிடை விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இந்த விருந்தின்போது மாணவர்கள் அனைவரும் விடுதியில் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டே சாப்பிட்டுள்ளனர்.
தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
School students drinks party in Andhra Pradesh