நடுரோட்டில் சிதறிய "₹ 7 கோடி".. போலீசார் தீவிர விசாரணை.!!
Rs7 crores scattered on road in Andhra Pradesh
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் மே 13ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நல்லஜார்லா அருகே லாரி மீது மோதிய மினி வேன் மோதிய விபத்தில் மூட்டை கட்டி கொண்டு செல்லப்பட்ட ரூ.7 கோடி பணம் சாலையில் சிதறியதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
![](https://img.seithipunal.com/media/CRIME 005.png)
மினி வேனில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7 கோடி பணத்தை பறிமுதல் செய்த போலீசார்ஓட்டுநரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் பறக்கும் படை சோதனைக்கு நடுவே விபத்தின் போது 7 கோடி ரூபாய் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Rs7 crores scattered on road in Andhra Pradesh