ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ.83 லட்சம் பறிப்பு!
Robbery of Rs. 83 lakhs from a retired teacher
ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் டிஜிட்டல் கைது என கூறி ரூ.83 லட்சம் பணம் பறித்த மர்ம நபரை வலைவீசி தேடிவருகின்றனர்.
மராட்டிய மாநிலம் பீட் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. இதில் பேசியவர் தன்னை மும்பையை சேர்ந்த போலீஸ் அதிகாரி என்று கூறியுள்ளார்.மேலும் பேசிய அவர் தங்கள் பெயரில் பார்சல் ஒன்று வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பதாகவும் கூறினார்.
இதுகுறித்த விசாரணைக்காக மே 20-ந் தேதி முதல் 30-ந்தேதிவரை 11 நாட்கள் ஆசிரியை டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.இதைக்கேட்ட ஓய்வு பெற்ற ஆசிரியை அதிர்ச்சியில் உறைந்தார்.
மேலும் அவர் வீட்டை, விட்டு எங்கும் செல்லக்கூடாது என மிரட்டல் விடுத்தார்.அதுமட்டுமல்லாமல் வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். பயந்துபோன ஓய்வு பெற்ற ஆசிரியை வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.83 லட்சம் வரை செலுத்தினார்.
கடைசிவரை அந்த மர்மநபர் ஆசிரியையை பணம் கேட்டு தொந்தரவு செய்தார். இதையடுத்து இந்த சம்பவம் குடும்பத்தினருக்கு தெரியவர உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.இந்தப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி மோசடி பேர்வழியை வலைவீசி தேடிவருகின்றனர்.
English Summary
Robbery of Rs. 83 lakhs from a retired teacher