வருடாந்திர அறிக்கை வெளியிட்ட ரிசர்வ் வங்கி! 25% செலவு அதிகரிப்பு! - Seithipunal
Seithipunal


ரிசர்வ் வங்கி தற்போது வருடாந்திர அறிக்கை வெளியிட்டுள்ளது.இதில், கடந்த 2023-24 நிதியாண்டில் பணம் நோட்டுகள் அச்சடிப்பதற்கு ரூ.5101.4 கோடி செலவானது. இந்நிலையில், 2024-25 நிதியாண்டில் 25% அதிகரித்து ரூ.6372.8 கோடி செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் புழக்கத்திலுள்ள பண மதிப்பு 6% அதிகரித்துள்ளது. அதில் நோட்டுகளின் அளவு 5.6 % 2024-25 நிதியாண்டில் அதிகரித்துள்ளது.குறிப்பாக 500 ரூபாய் நோட்டுகள் 40.9 %புழக்கத்தில் இருந்ததாகவும், 10 ரூபாய் நோட்டுகள் 16.4 % புழக்கத்தில் இருந்தாகவும் வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், 10 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் 31.7 % புழக்கத்தில் இருந்தாகவும் தெரிவித்துள்ளது. ஆர்பிஐ ( RBI ) கடந்த 2023ஆம் ஆண்டு 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தது. அப்போது சுமார் ரூ.3.56 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது.

அதில் கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையில் 98.2 % வங்கிக்கு திரும்பியுள்ளது.இதில் நாணயங்கள் மதிப்பு மற்றும் அளவில் முறையே 9.6 %, 3.6 % அதிகரித்துள்ளது. குறிப்பாக எலக்ட்ரானிக் பணம் (e-rupee) மதிப்பு 334 % அதிகரித்துள்ளது.தற்போது 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 7பாய், 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது.

இதில் 2 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ அச்சிடுவதில்லை. 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Reserve Bank releases annual report 25 PERCENTAGE increase in expenses


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->