வருடாந்திர அறிக்கை வெளியிட்ட ரிசர்வ் வங்கி! 25% செலவு அதிகரிப்பு!
Reserve Bank releases annual report 25 PERCENTAGE increase in expenses
ரிசர்வ் வங்கி தற்போது வருடாந்திர அறிக்கை வெளியிட்டுள்ளது.இதில், கடந்த 2023-24 நிதியாண்டில் பணம் நோட்டுகள் அச்சடிப்பதற்கு ரூ.5101.4 கோடி செலவானது. இந்நிலையில், 2024-25 நிதியாண்டில் 25% அதிகரித்து ரூ.6372.8 கோடி செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் புழக்கத்திலுள்ள பண மதிப்பு 6% அதிகரித்துள்ளது. அதில் நோட்டுகளின் அளவு 5.6 % 2024-25 நிதியாண்டில் அதிகரித்துள்ளது.குறிப்பாக 500 ரூபாய் நோட்டுகள் 40.9 %புழக்கத்தில் இருந்ததாகவும், 10 ரூபாய் நோட்டுகள் 16.4 % புழக்கத்தில் இருந்தாகவும் வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், 10 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் 31.7 % புழக்கத்தில் இருந்தாகவும் தெரிவித்துள்ளது. ஆர்பிஐ ( RBI ) கடந்த 2023ஆம் ஆண்டு 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தது. அப்போது சுமார் ரூ.3.56 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது.
அதில் கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையில் 98.2 % வங்கிக்கு திரும்பியுள்ளது.இதில் நாணயங்கள் மதிப்பு மற்றும் அளவில் முறையே 9.6 %, 3.6 % அதிகரித்துள்ளது. குறிப்பாக எலக்ட்ரானிக் பணம் (e-rupee) மதிப்பு 334 % அதிகரித்துள்ளது.தற்போது 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 7பாய், 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது.
இதில் 2 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ அச்சிடுவதில்லை. 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.
English Summary
Reserve Bank releases annual report 25 PERCENTAGE increase in expenses