ரெட் அலர்ட்.. வெளுத்து வாங்க போகும் கனமழை.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!
Red alert for Uttarakhand
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. மேலும், சில மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் அக்டோபர் 18-ம் தேதி, அதாவது (இன்று) கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று முதல் வருகின்ற 19ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உத்தரகாண்ட் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் படி அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Red alert for Uttarakhand