ரியாக்டர் வெடித்து பயங்கர தீ விபத்து.. 6 பேர் பலி.. 12 பேர் படுகாயம்.!
Reactor explodes, fire kills 6, injures 12 in Andhra Pradesh
ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டத்தில் அக்கிரெட்டிகுடேம் இன்று பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.
வீடியோ நேற்று இரவு வழக்கம் போல் 50 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், தொழிற்சாலையில் உள்ள நான்காவது இடத்தில் இரவு 2 மணி அளவில் ரியாக்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து நான்காவது யூனிட் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த தீ விபத்தில் 6 பேர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Reactor explodes, fire kills 6, injures 12 in Andhra Pradesh