இமாச்சல் பிரதேசத்தில் இரண்டு நாட்களாக கனமழை.! நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் மீட்பு.! - Seithipunal
Seithipunal


இமாச்சலில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கிய 8 விவசாயிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலுமணாலியில் இரண்டு நாட்களாக பலத்த கனமழை பெய்துள்ளது. இந்த கனமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் சேதம் அடைந்து உள்ளன.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சுமார் 8 விவசாயிகள் சிக்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராணுவ குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ராணுவத்தினர் கொட்டும் மழையிலும் போராடி இடிபாடுகளில் சிக்கிய 8 விவசாயிகளை மீட்டு உள்ளனர்.

இதைத்தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது, இதில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rain landslide in Himachal Pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->