இமாச்சல் பிரதேசத்தில் இரண்டு நாட்களாக கனமழை.! நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் மீட்பு.!
Rain landslide in Himachal Pradesh
இமாச்சலில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கிய 8 விவசாயிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் குலுமணாலியில் இரண்டு நாட்களாக பலத்த கனமழை பெய்துள்ளது. இந்த கனமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் சேதம் அடைந்து உள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சுமார் 8 விவசாயிகள் சிக்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராணுவ குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ராணுவத்தினர் கொட்டும் மழையிலும் போராடி இடிபாடுகளில் சிக்கிய 8 விவசாயிகளை மீட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது, இதில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
Rain landslide in Himachal Pradesh