இமாச்சல் பிரதேசத்தில் இரண்டு நாட்களாக கனமழை.! நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் மீட்பு.! - Seithipunal
Seithipunal


இமாச்சலில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கிய 8 விவசாயிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலுமணாலியில் இரண்டு நாட்களாக பலத்த கனமழை பெய்துள்ளது. இந்த கனமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் சேதம் அடைந்து உள்ளன.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சுமார் 8 விவசாயிகள் சிக்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராணுவ குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ராணுவத்தினர் கொட்டும் மழையிலும் போராடி இடிபாடுகளில் சிக்கிய 8 விவசாயிகளை மீட்டு உள்ளனர்.

இதைத்தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது, இதில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rain landslide in Himachal Pradesh


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->