சாதிக்குறித்து அவதூறு! குற்றவாளி ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை - சூரத் நீதிமன்றம்!
RahulGandhi case judgment soorath court
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், பிரதமர் மோடியின் சமூகம் குறித்த அவதூறாக பேசி, அந்த சமூகத்திற்கு கலங்கத்தை விளைவித்ததாக கூறி, ராகுல் காந்தி குற்றவாளி என்று சூரத் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அரசியல் மேடை மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பதாக நினைத்து, அவரின் பெயரின் பின்னால் உள்ள சமூகத்தின் பெயரை குறிக்கும் 'மோடி' என்ற சொல்லை பயன்படுத்தி, மோடி என்றால் திருடர்கள் என்கின்ற கண்ணோட்டத்தோடு பேசியதாக பாஜக தரப்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது குறித்து விளக்கம் அளிக்கையில், ராகுல் காந்தி குறிப்பிட்டது நீரவ் மோடி மற்றும் லலிக் மோடி குறித்து தான். ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கம் அவருக்கு இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் பாஜக தரப்பில் அழுத்தம், திருத்தமாக வாதத்தை முன் வைத்ததன் காரணமாக, ராகுல் காந்தி குற்றவாளி என்று தற்போது சூரத் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு என்ன விதமான தண்டனை என்பது குறித்து நீதிமன்றம் தெரிவிக்கையில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
English Summary
RahulGandhi case judgment soorath court