சொத்து பிரிப்பதில் தகராறு: மகன் மற்றும் பேரனுக்கு எமனாக மாறிய தந்தை தற்கொலை!  - Seithipunal
Seithipunal


கேரளா, திருச்சூர் மண்ணுத்தி பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன். இவர் மகன் ஜோஜி (வயது 40) குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் தந்தை-மகன் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த ஜான்சன், அறையில் தூங்கிக் கொண்டிருந்த மகன், மருமகள், பேரன் 3 பேரையும் அறையில் வைத்து பூட்டி பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். 

இதில் மகன், பேரன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். மகன் குடும்பத்தினரை கொலை செய்த ஜான்சன் விஷம் குடித்து வீட்டு மாடியில் மயங்கி கிடந்தார். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விஷம் குடித்த ஜான்சன் மற்றும் படுகாயம் அடைந்துள்ள அவரது மருமகள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

பின்னர் ஜான்சனின் மகன் மற்றும் பேரன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜான்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அவரது மருமகள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

property division Dispute son grandson killed Father suicide


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->