வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு அதிவேகமாக செயல்பட்டு வருகிறது: பிரதமர் மோடி பேச்சு..!
Prime Minister Modi says the central government is working very fast for the development of the northeastern states
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக 04 மாநிலங்களுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ள்ளார். அதன் முதற்கட்டமாக சிக்கிம் மாநிலதில் கேங்டாக்கில் உருவாக்கப்பட்ட 50-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக, அங்கு செல்ல முடியாமல் போயுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் பக்தோக்ராவில் இருந்தபடி, வீடியோ கான்பிரன்ஸ் மூலம், சிக்கிம் 50-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், அண்மையில் வடகிழக்கு மாநில முதலீட்டாளர் மாநாடு டில்லியில் நடத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதில், பங்கேற்ற முதலீட்டாளர்கள், சிக்கிம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம், இளைஞர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், விளையாட்டில் இந்தியாவை சிறந்த நாடாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார். வரும் காலங்களில் வடகிழக்கு மாநிலங்கள் இதனை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

சிக்கிம் விவசாயிகள் தற்போது டிரெண்டுக்கு ஏற்றவாறு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்றும், இயற்கையான விவசாயத்தை சிக்கிம் விவசாயிகளிடையே ஊக்குவிக்க, நாட்டின் முதல் இயற்கை மீன் வளர்ப்பு இடத்தொகுப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றும் மோடி பேசினார். அத்துடன், இந்த இயற்கை மீன் வளர்ப்பு இடத்தொகுப்பு மூலம் சிக்கிம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார்.
இதற்கு முன்னதாக, நம்ச்சி ரூ.750 கோடி மதிப்பிலான மாவட்ட மருத்துவமனை, சங்காசோலிங் பயணிகள் ரோப்வே உள்பட பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். மேலும், மேற்குவங்கத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில், 2.5 லட்சம் குடும்பங்கள் பயனடையும் விதமாக, ரூ.1,010 கோடி மதிப்பிலான கேஸ் விநியோகிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார் . பின்னர், பீகாரில் பாட்னா விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது..
English Summary
Prime Minister Modi says the central government is working very fast for the development of the northeastern states