தேர்வு முடிந்து வீட்டிற்குச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்... போலீஸ்காரர் கைது..!
Policeman arrested for raping a 10th class girl in Andhra
ஆந்திர பிரதேச மாநிலத்தில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர பிரதேசம் மாநிலம் குர்ஜாலா பகுதியை சேர்ந்தவர் 15 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவி. இந்நிலையில் நேற்று முன்தினம், மாணவி தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த தாகேபள்ளி காவல் நிலைய போலீஸ்காரர் நாக பாபு, மாணவியை ஏமாற்றி லாஜிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்பு அங்கு வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து மாணவி வீட்டிற்கு தாமதமாக வந்ததால் இது குறித்து பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்பொழுது மாணவி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார் இதை கேட்ட அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இது குறித்து பிடுகுரல்லா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் நாக பாபுவை கைது செய்தனர்.
மேலும் இதையறிந்த நாக பாபுவின் மனைவி, கணவரின் செயலால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Policeman arrested for raping a 10th class girl in Andhra