பெற்றக் குழந்தையைத் தவிக்கவிட்டு ஆண் நண்பருடன் சென்ற தாய் - போலீசார் விசாரணை.!!
police investigation women going with boy friend in telungana
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் பகுதியில் தனது இரண்டு வயது மகனை பேருந்து நிலையத்தில் தனியாக தவிக்கவிட்டு, ஆண் நண்பருடன் தாய் இருசக்கர வாகனத்தில் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து நிலையத்தில் தாய் இல்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்த பேருந்து நிலைய ஊழியர்கள் சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தீவிர விசாரணை நடத்தி, சில மணி நேரங்களுக்குள் அந்தப் பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் அந்தப் பெண்ணின் கணவரைத் தொடர்பு கொண்டு குழந்தையை ஒப்படைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police investigation women going with boy friend in telungana