புல்டோசரில் திருமணத்திற்கு வந்த மணமகன்.. அபராதம் விதித்த காவல்துறையினர்..! - Seithipunal
Seithipunal


திருமண நிகழ்ச்சிக்கு குதிரை, கார் போன்றவற்றில் பயணம் செய்வது வழக்கம். ஆனால்,  மத்தியப் பிரதேசத்தின் பெதுல் நகராட்சியை சேர்ந்தவர் அங்குஷ் ஜெய்ஸ்வால் என்ற மணமகன் புல்டோசரில் ஊர்வலம் வந்துள்ளார். டாடா கன்சல்டன்சியில் பணிபுரிந்து வரும் அவருக்கு வழக்கமான திருமண ஊர்வலத்தில் ஆர்வம் என கூறப்படுகிறது.

இதனால், அவரது திருமணத்தின் போது புல்டோசரில் வர ஆசைப்பட்டுள்ளார். அதற்கு அவரது குடும்பத்தினரும் ஒப்புகொண்டுள்ளனர். அதன் படி, புல்டோசரின் பிளேடில் நண்பர்களுடன் அமர்ந்து பயணம் செய்தார். இந்த திருமணம் நிகழ்வின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், மோட்டார் வாகன சட்டத்தை மீறி புல்டோசரில்  பயணம் செய்ய அனுமதித்த புல்டோசர் ஒட்டுநரை கைது செய்த காவல்துறையினர் அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police fined the groom for coming to the wedding in a bulldozer


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->